Thursday, 2 October 2014

அணிகலன் அணிவதால் ஏற்படும் பயன்கள்


பொட்டு
பொட்டு வைக்கும் பெண்களை அவ்வளவு சீக்கிரம் மெஸ்மரிசம் செய்ய முடியாது....

தோடு
மூளையின் செயல் திறன்அதிகரிக்கும். ண்பார்வை திறன் கூடும் . 
நெற்றிச்சுட்டி
நெற்றிச்சுட்டி அணியும் போது தலைவலி ,சைனஸ் பிரச்சனை சரி செய்கிறது.
மோதிரம்
பாலுறுப்புகளை தூண்டும் புள்ளிகள் மோதிர விரலில் உள்ளது.. ப்ரேசிலட்,வாட்ச்,காப்பு அணிவதும் பாலுறுப்பின் புள்ளிகளை தூண்டும்.
செயின்,நெக்லஸ்
கழுத்தில் செயின் அணியும் போது உடலுக்கும் தலைக்கும் இடையே உள்ள சக்தி ஓட்டம் சீராகும்.
வங்கி 
கையின் பூஜை பகுதியில் இறுக்கமான அணிகலன்கள் அல்லது கயிறுகள் அணியும் பொது உடலில் ரத்த ஓட்டம் சீராகி பதற்றம், படபடப்பு, பயம் குறைகிறது .மார்பக புற்று நோய் வருவது தவிர்க்க படுவதாக ஆய்விலே உருதிபடுதப்படிருகிது
வளையல் 
வளையல்கள் அந்த பகுதியின் புள்ளிகளை அழுத்துவதன் மூலம் வெள்ளையணு உற்பத்தி உடலில் அதிகரிக்கிறது.முக்கியமான ஹார்மோன்கள் சுரப்பும் ரெகுலேட் செய்யபடுகிறது.இதன் மூலம்
தாய்க்கும் சேய்க்கும் நோய் எதிர்ப்பாற்றல் கூடும்.

லம்பாடி பெண்களுக்கு மார்பக புற்று நோய் வருவது இல்லை.காரணம் மணிக்கட்டில் இருந்து முழங்கைக்கு மேல்வரை நெருக்கமாக வளையல்களை அணிவதால் மார்பு பகுதியின் ரத்த ஓடம் சீராக வைத்திருக்க உதவுகிறது.
ஒட்டியாணம்
ஒட்டியாணம் அணியும் போது இடுப்பு பகுதியின் சக்தி ஓட்டம் நன்றாக
தூண்டப்பட்டு ஆரோக்கியம் கூடும்.வயிற்று பகுதிகள் வலுவடையும்.
மூக்குத்தி
மூக்கில் இருக்கும் சில புள்ளிகளுக்கும் பெருங்குடல் மற்றும்
சிறுகுடலுக்கும் நெருக்கமான தொடர்னு உண்டு.அந்த புள்ளிகள் தூண்டப்படும் பொது அது சமந்தமான நோய்கள் குணமாகும் .மூக்குத்தி அணியும் பெண்கள் சில நாட்களில் விட்டு சிக்கல் சரியாகி வருவதை உணரலாம் .
 கொலுசு  
கல்லீரல்,மண்ணீரல்,பித்தப்பை,சிறுநீரகம், சிறுநீர்ப்பை,வயிறு போன்ற மிக முக்கிய உறுப்புகளின் செயல் திறனை தூண்டிவிடும் அற்புதமான
அணிகலன் கொலுசு.கர்பப்பை இறக்க பிரச்சனையை தடிமனான கொலுசு அணிவதன் மூலம்தீர்க்கலாம் .
மெட்டி
மெட்டி அணிவது கர்ப்பப்பையை பலப்படுத்தும் .செக்ஸுவல் ஹார்மோன்கள் தூண்டும். பில்லாலி என்பது குழந்தை பிறந்தவுடன் 3வது விரலில் அணியும்போது சில புள்ளிகள் தூண்டப்பட்டு பால் சுரப்பை அதிகப்படுத்தும்

Wednesday, 1 October 2014

தேன் அசல் - நகல் கண்டுபுடிப்பது எப்படி?

சமீப காலமாக நகரத்தின் எல்லா பிரதான ஏரியாக்களிலும் அந்தக் காட்சியைக் காண முடிகிறது. இரண்டு சக்கர வாகனங்களில் பிரமாண்ட அளவிலான தேனடையைச் சுமந்தபடி தேன் வியாபாரம் செய்கிறார்கள் இளைஞர்கள். பரம்பரையாக தேன் எடுக்கும் தொழிலில் ஈடுபட்டிருப்பவர்களைப் போன்றதான தோற்றம் அவர்களுடையது. அப்போது எடுத்தது மாதிரியான ஃப்ரெஷ்ஷான தேனடையைப் பார்க்கிற மக்களுக்கு, தேவையே இல்லாவிட்டால்கூட தேன் வாங்கும் ஆர்வம் தலைதூக்கும். தேனடையில் இருந்து ஃப்ரெஷ்ஷாக எடுக்கப்பட்ட தேன் எனச் சொல்லி, ஏற்கனவே பாட்டில்களில் நிரப்பி வைத்திருக்கிற தேனை, லிட்டர் 200 ரூபாய் வரைக்கும் விற்கிறார்கள்.

சுத்தமான தேனாச்சே என்கிற நம்பிக்கையில், காசு அதிகமாக இருந்தாலும் பரவாயில்லை என லிட்டர் கணக்கில் தேன் வாங்கிச் செல்கிறார்கள் மக்கள். கிடைத்தற்கரிய பொருளை வாங்கி வந்து விட்ட மகிழ்ச்சியில், குழந்தைகள் முதல் பெரியவர்கள் அனைவருக்கும் அடுத்த சில வேளைகளுக்கு தேனாபிஷேகம் செய்யாத குறையாக எல்லா உணவுகளிலும் தேன் சேர்த்துக் கொடுப்பார்கள். இரண்டு, மூன்று நாட்களில் அரை பாட்டிலுக்கும் மேல் காலியாகி இருக்கும். மிச்சமிருக்கும் தேன், மெல்ல தன் சுய ரூபத்தைக் காட்டத் தொடங்கும். கரைந்தும் கரையாமலும் கால் பாட்டிலை அடைத்திருக்கும் சர்க்கரை!


ஆமாம்... அத்தனை நாள் அசல் தேன் போல உங்களை அசத்திய அந்தத் திரவம் தேனே இல்லை. சர்க்கரையும், மைதாவும் சேர்த்த கரைசல். சர்க்கரையும் தண்ணீரும் சேர்த்து கேரமலைஸ் (பொன்னிறமான பாகு) செய்யப்பட்டு பிறகு அதில் மைதா கரைசலைச் சேர்த்து அப்படியே தேன் நிறம் மற்றும் பதத்துக்கு மாற்றுகிறார்கள். செயற்கை நிறம் மற்றும் மணத்தையும் சேர்த்து தேன் என்கிற பெயரில் விற்பனை செய்கிற இந்த வியாபார உத்தியில் ஏமாந்து போகிறவர்கள் எக்கச்சக்கம். இந்த போலிக் கரைசல், ஏகப்பட்ட வியாதிகளுக்கு வித்திடுவது தெரியுமா?

மருந்துப் பொருளான தேனை எப்போது, யாருக்கு, எப்படிக் கொடுக்கலாம்? சித்த மருத்துவரிடம் பேசினோம். ‘‘தேன் நல்லதுதான். ஆனால், அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதுதான் இதற்கும் பொருத்தம். எந்த வயதில், எந்த அளவில், எந்தப் பொருளுடன் தேனைக் கொடுக்கிறோம் என்பதும் முக்கியம்” என்கிறார் மருத்துவர்

 ‘‘சித்த மருத்துவத்தில் தேனின் பயன்பாடு தவிர்க்க முடியாதது. தேன் நல்லது என்கிற எண்ணத்தில் சிலர் குழந்தைகளுக்கு தினமும் அதைக் கொடுப்பார்கள். அது தவறு. சளித் தொந்தரவு இருப்பவர்களுக்கு தேனுடன் மருந்தைக் கலந்து கொடுக்கும் போது சீக்கிரம் குணம் தெரியும். தேன் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கக் கூடியது. குழந்தைகளுக்கு அதீத வயிற்றுப் போக்கு ஏற்பட்டு, சக்தி இழக்கும் போது, தேன் கொடுக்கலாம். தேனில் உள்ள குளூக்கோஸ், ஃப்ரக்டோஸ் போன்றவை குழந்தையின் உடலுக்குத் தேவையான ஆற்றலை உடனடியாகக் கொடுக்கும்.

தேனை எதனுடன் கலந்து கொடுக்கிறோம் என்பதைப் பொறுத்து அதன் பலன் வேறுபடும். உதாரணத்துக்கு பலவீனமான, எடை குறைவுடன் காணப்படுகிற குழந்தைகளுக்கு பாலுடன் தேன் கலந்து கொடுத்தால் எடை கூடும். இதை அனுபானம் என்கிறோம். அதுவே வெந்நீரில் தேன் கலந்து குடித்தால் எடை குறையும். மருந்துடன் தேன் சேரும் போது அதன் குணம் வேறு மாதிரி மாறும். தேனை வெறுமனே கொடுப்பதானால் வாரம் ஒரு முறை 1 டீஸ்பூன் அளவுக்குக் கொடுத்தால் போதுமானது. ஒரு வயதுக்குக் குறைவான குழந்தைகளுக்குக் கொடுக்க வேண்டாம்.

தவறான தேனை உட்கொள்ளும் போது, அதன் பாதிப்புகள் பல விதங்களில் தெரியும். கலப்படத் தேனில் கலக்கப்படுகிற மைதா, சர்க்கரை, செயற்கை நிறமிகள் போன்ற வற்றைப் பொறுத்து சாதாரண அஜீரணம், வயிற்று வலியில் தொடங்கி, உடல் பருமன் உள்ளிட்ட பல பிரச்னைகள் தாக்கலாம். எனவே, சுத்தமான தேன்தானா எனத் தெரிந்து வாங்கி உபயோகிக்க வேண்டியது மிக முக்கியம்” என்கிற டாக்டர் ஹிமேஷ்வரி, தன் அனுபவத்தில் சந்தித்த நிகழ்வு ஒன்றையும் இங்கே சுட்டிக் காட்டுகிறார்.

‘‘நாகர்கோவில் பக்கம் தேன் கூடு வளர்ப்பார்கள். ஒருமுறை அங்கே சென்றிருந்த போது சுத்தமான தேன் கிடைக்குமே என வாங்க நினைத்தேன். அது சீசன் இல்லை என்றும், அப்போது தேன் வாங்குவது சரியானதாக இருக்காது என்றும் சொன்னார்கள். பூக்கள் இல்லாத அந்த சீசனில், சர்க்கரைக் கரைசலைத் தயார் செய்து வைப்பார்களாம். தேனீக்கள் அதைச் சாப்பிட்டு விட்டு, தேனாக மாற்றிக் கொள்ளுமாம். தேனீக்களே உருவாக்குவதுதான் என்றாலும், அது சர்க்கரைக் கரைசல் கொண்டு உருவான செயற்கைத் தேன் என்பதால் ஆரோக்கியமானதல்ல என்றும் அவர்கள் சொன்ன தகவல் அதிர்ச்சியாக இருந்தது.

எனவே, பூக்களில் இருந்து பெறப்படுகிற அசல் தேன்தான் ஆபத்தில்லாதது’’ என்கிற டாக்டர், அசல் தேனைக் கண்டுபிடிக்கும் சில வழிகளையும் குறிப்பிடுகிறார்.



- அசல் தேனில் நல்ல நிறம், மணம், சுவை மூன்றும் இருக்கும். லேசான கசப்புச் சுவை தெரியும். தண்ணீரில் விட்டால் உடனே கரையாது. நிறம் மாறாது. கலப்படத் தேன் என்றால் நிறம் மாறும். கரையும்.

- ஒரு வெள்ளைத்தாளில் ஒரு துளி தேனை விட வேண்டும். அந்தத் தேனை, தேன் ஊற்றப்பட்ட காகிதம் உறிஞ்சாமலும், அந்த வெள்ளைத் தாளில் பரவாமலும் இருந்தால், அது அசல் தேன். ஒரு வேளை, அந்தக் காகிதம், அந்த ஒரு துளி தேனை உறிஞ்சினாலோ அல்லது பரவ விட்டாலோ அந்தத் தேன் கலப்பட தேன் என அர்த்தம்.

- ஒரு தீக்குச்சியின் மருந்துப் பகுதியில் ஒரு துளி தேனை விட்டு, அந்த தீக்குச்சியைக் கொளுத்தவும். உடனே தீப்பற்றி எரிந்தால், அது அசல் தேன். தீக்குச்சி எரியா விட்டால் அது கலப்பட தேன்.